Sunday 5th of May 2024 07:47:59 AM GMT

LANGUAGE - TAMIL
.
பளையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது!

பளையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது!


பளை பகுதியில் உருக்குலைந்த நிலையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தம்பகாமம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது.

பளையிலிருந்து மாமுனை செல்லும் காட்டுப் பகுதியிலேயே உருக்குலைந்த நிலையில் சடலம் எலும்புக்கூடாகக் காணப்படுவதாக பளைப் பொலிஸார் தெரிவித்திருந்ததுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுவந்த நிலையில் தற்போது குறித்த உருக்குலைந்த சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றைச் சேர்ந்த கார்த்திகேசு சுந்தரமூர்த்தி என்பது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE